உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

சாவகச்சேரியின் புதிய பிரதி நகர பிதா தெரிவு ஒத்திவைப்பு.!

91 பார்வைகள்

யாழ். சாவகச்சேரி நகர சபையின் பிரதி நகர பிதா கிஷோரை அந்தப் பதவியில் இருந்து விலக்கி வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் எதிர்மனுதாரர்களின் பதில் மனு தாமதமாகின்ற காரணத்தால் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தங்கள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்கின்றமை காலதாமதமாகின்ற காரணத்தால் புதிய பிரதி நகர பிதாவைத் தெரிவு செய்வதற்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட 21 ஆம் திகதியை 28 ஆம் திகதிக்குத் தாங்கள் ஒத்திவைப்பதற்கு எதிர் மனுதாரர் தரப்பு நேற்று நீதிமன்றத்தில் பொறுப்பேற்றுக் கொண்டது.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆயினும் எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு சில ஆவணங்களைப் பெற வேண்டி இருப்பதால் இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார்.

அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் பதில் மனுவைத் தாக்கல் செய்யும்படியும், 24ஆம் திகதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சி.சதீஸ்கரன் முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விசாரணைக்கு இந்தத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற…

61 0 0
இலங்கை செய்திகள்

விவசாயிகளின் வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – திலித் ஜயவீர வலியுறுத்தல்!

“எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால், இன்றைய அரசு இந்நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக் கொ#லை செய்த கணவன்!

காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொ#லை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

64 0 0
இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்னும் கையொப்பமிடவில்லை – மனோ கணேசன் எம்.பி தெரிவிப்பு!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னும் கையொப்பமிடவில்லை என அதன் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.…

55 0 0