களுத்துறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு!
களுத்துறை மாவட்டம், மத்துகம, நாபொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்று சனிக்கிழமை பிற்பகல் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் வேளையில் அந்த வீட்டுக்கு வந்த ஆயுதமேந்திய குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு ரி – 56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் சூடு நடத்தியவர்கள் குறித்த விவரங்களைக் கண்டறிய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.