உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
13 திங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் சமையல் அறையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
16 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்ட விசாரணைகளில், கலவரத்தின் போது கைதிகள் சிறைச்சாலையின் சமையலறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள கூர்மையான ஆயுதங்களைக் கையாண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், சமையலறையிலிருந்த தேங்காய்களை அதிகாரிகள் மீது வீசித் தாக்குதல் நடத்தியுள்ளமையும் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தக் கொடூர மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த கைதிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்குத் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தாது இனியும் வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? – சுகாதார அமைச்சுக்கு மருத்துவர் சமல் சஞ்சீவ சாட்டையடி!

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் சிவில்…

15 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது மிகவும் அவசியம்!

அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி, நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் ‘இலஞ்சம்’ அல்லது ‘பரிசு’…

12 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர் கைது!

சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்…

13 0 0
இலங்கை செய்திகள்

நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால், நாளை திங்கட்கிழமை முதல் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி…

10 0 0