உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
13 திங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
38 பார்வைகள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த அவர், இந்தத் திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஓய்வூதிய முறையைத் தெரிவு செய்ய முடியும் என குறிப்பிட்டார்.

அதன்படி, ஓய்வு பெற்ற பின்னர் மாதாந்த ஓய்வூதியம் பெறுவதா அல்லது பணிக்காலம் நிறைவடைந்ததும் மொத்த தொகையை ஒரே தடவையாக பெற்றுக்கொள்வதா என்பதை தொழிலாளர்களே தீர்மானிக்க முடியும்.

மேலும், சட்டபூர்வமாக அனுப்பப்படும் பணவணுப்பல்களின் பதிவுகளை முறையாக பராமரிக்கவும், ஓய்வூதிய கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து விசேட செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரதவிரு’ ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் ரூ.2.1 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு வரலாற்றில் அதிகளவிலான வெளிநாட்டு பணவரவு பதிவாகியுள்ளது.

எனினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளதால், அதனை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தாது இனியும் வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? – சுகாதார அமைச்சுக்கு மருத்துவர் சமல் சஞ்சீவ சாட்டையடி!

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் சிவில்…

15 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது மிகவும் அவசியம்!

அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி, நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் ‘இலஞ்சம்’ அல்லது ‘பரிசு’…

12 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர் கைது!

சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்…

13 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் சமையல் அறையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும்…

16 0 0