உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் கீழ் வரும் ஃபேர்லோன் தேயிலை தோட்டத்தின் சின்ன சூரியகந்த பகுதியில் வசித்து வரும் 62 வயதுடைய நபர் நேற்று மீட்டியாகொட விவசாய நிலப் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று மாலை (06) கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், ஃபேர்லோன் தேயிலைத் தோட்டத்தின் சூரியகந்த பகுதியைச் சேர்ந்த (45) வயதுடையவர் ஆவார்.

வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தைத் தடுப்பதற்காக, சந்தேக நபர் தனது வீட்டிலிருந்து அனுமதியின்றி காய்கறித் தோட்டத்திற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளார். மேலும், இறந்தவர் அனுமதியற்ற மின் கம்பிகளில் விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர், சமிமலையில் உள்ள ஃபேர்லான் தேயிலைத் தோட்டத்தின் சூரியகந்த பகுதியில் வசித்து வந்த, ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான மரிமுத்து கந்தசாமி (62) ஆவார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வரும் மஸ்கெலியா பொலிஸ், சந்தேகநபரை இன்று ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் இன்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்நிலையில் உடற்கூற்று பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

2 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0