உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மன்னார் – மடுகல்வி வலயத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சீர்செய்வதற்குரிய, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் இணையவழியில் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மடு வலயக்கல்விப் பணிப்பாளர், அவ்வாறு இணையவழியில் பதிவேற்றப்பட்டுள்ள பாடசாலைகளில் பாதிப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் விரைவில் வழங்கப்படுமென வடமாகாண கல்வித்திணைக்களம் தமக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
டித்வா புயலால் மடு கல்வி வலயத்தின், மாந்தை மேற்கு கல்விக் கோட்டத்திலுள்ள 09 பாடசாலைகளில் பாடசாலைப் பொருட்கள் பாதிப்படைந்திருப்பதுடன், 25 பாடசாலைகளில் பாடசாலைக் கட்டுமானங்கள் பாதிப்படைந்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறு டித்வா புயலால் பாதிப்புக்குள்ளான இந்தப் பாடசாலைகளை சீர்செய்வதற்குரிய நிதிகளைப் பெறுவதில் ஏன் தாமதம் ஏற்படுகின்றது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட அந்தப் பாடசாலைகளின் விபரங்கள் உரிய வகையில் அனுப்பப்பட்டதா? அல்லது, தரவுகளை உரியவகையில் அனுப்பவதில் தாமதங்கள் ஏற்பட்டதா? அந்த நிதிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் என்ன? இது தொடர்பில் உரியவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் – என்றார்.

இதன்போது மடு வலயக்கல்வி பணிப்பாளர் பதிலளிக்கையில்,
டித்வா புயலினால் ஏற்பட்ட தாக்கம் தொடர்பாக நாம் மன்னார் மாவட்ட செயலருக்கும், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கும் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

மாகாண கல்வித் திணைக்களம் எம்மால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் பாதிப்பு விபரங்களை இணையவழியில் பதிவேற்றியுள்ளனர். இவ்வாறு இணையவழியில் பதிவேற்றப்பட்ட அனைத்துப் பாதிப்புக்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் விரைவில் கிடைக்கபெறுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளருடன் இடம்பெற்ற கூட்டத்திலும் டித்வா புயல் பாதிப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறுமென்றே தெரிவிக்கப்பட்டுள்ளது – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

2 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0