உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

குருநாகலில் குடும்பஸ்தர் தடியால் அடித்துக் கொ*லை! – சகோதரன் கைது

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

குருநாகல் மாவட்டம், வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தடியால் அடித்துப் படுகொ*லை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவருடைய சொந்தச் சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த சகோதரர், அருகில் இருந்த தடியொன்றால் பலமாகத் தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொ*லைச் சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸ் நிலையத்துக்குப் பெறப்பட்ட அவசரத் தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து உடனடியாக விசாரணைகளை நடத்திய பொலிஸார், இந்தக் கொ*லையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உயிரிழந்தவரின் சகோதரரைக் கைது செய்துள்ளனர்.

பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கொ*லை குறித்து வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

36 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

56 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0