ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!
சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
இப்போட்டியில் அவர் ஈட்டியை 92.07 மீட்டர் தூரம் எறிந்து இந்த அபார வெற்றியைப் பதிவு செய்தார்.
அவரது விளையாட்டு வாழ்க்கையில் ஈட்டியை 92 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு எறிவது இது இரண்டாவது முறையாகும்.
தற்போது உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ருமேஷ் தரங்க, இந்த வரலாற்றுச் சாதனையை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்று நாட்டின் தடகள வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.
இலங்கை தடகள வரலாற்றில் ஈட்டி எறிதல் பிரிவில் பதிவான மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த எறிதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
உலகத் தடகள கூட்டமைப்பின் (World Athletics) தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ள ருமேஷ் தரங்கவின் இந்தச் சீரான திறமை, எதிர்வரும் சர்வதேச போட்டிகளிலும் இலங்கைக்குப் பதக்க வாய்ப்புகளை மேலும் உறுதி செய்துள்ளது.