உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

இதன் நேரடி விளைவாக, திருகோணமலை –நிலாவெளி கடற்கரையை வாழ்வாதாரமாகக் கொண்ட சுற்றுலாப் படகு சேவை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

​மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டமை மற்றும் விமானக் கட்டண அதிகரிப்பு காரணமாக, ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இதனால் நிலாவெளி மற்றும் புறாத்தீவு (Pigeon Island) நோக்கிய படகுச் சவாரிகள் மந்தகதியில் காணப்படுகின்றன. இலங்கையில் அண்மைக்காலமாக எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை உயர்வால் படகுச் சவாரி நடாத்துவதற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க முடியாத நிலையில் ஓட்டுநர்கள் உள்ளனர். உள்ளூர் தொழிலாளர்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணியாக வெளிமாவட்டப் படகுகளின் வருகை அமைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தொழில் புரிவதற்காகப் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களால் தமக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக உள்ளூர் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ​”சுற்றுலா படகு சேவைக்கு அரசாங்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிப் பத்திரங்களே வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி பிற மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து தொழிலில் ஈடுபடுபவர்களால், பாரம்பரியமாக இத்தொழிலை நம்பியுள்ள எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது” என நிலாவெளி படகு ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

​தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, படகு ஓட்டுநர்களுக்கு எரிபொருள் நிவாரணம் அல்லது விஷேட சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் முறையான அனுமதிப்பத்திரமின்றி வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தொழில் புரிபவர்களைக் கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை நிலாவெளி படகு உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0