உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்தி நான்காவது கட்டம் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
1 பார்வைகள்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்தி நான்காவது கட்டமானது 26.04.2026 இன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரது மக்கள் தொடர்பகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இக்கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 61 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த செயற்றிட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கடந்த 17.05.2014 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த எழுபத்திநான்காம் கட்டத்துடன் இதுவரையில் 4,019குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

மேலும் 02ஆம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அமரர் நாகராசா சாம்பசிவம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் ரவிகரன் பானுகோபன் அவர்களால் வாழ்வோம் வளம்பெறுவோம் 74ஆம் கட்டத்திற்குரிய நிதியுதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிக்கையடி இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…

13 0 0
இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

18 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

26 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

19 0 0