உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

துரை மற்றும் ஜெயம் விருது வழங்கல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

துரைவியின் 95 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரையும், துரை மற்றும் ஜெயம் விருது வழங்கல் நிகழ்வும் கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் முன்னாள் அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன் தலைமையில் நேற்று முன்தினம்(29) நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொகுப்புரையையும், வரவேற்புரையையும் மேமன்கவி நிகழ்த்தினார்.

இதன்போது ந. இரவீந்திரன் எழுதிய “தமிழ்ப் பண்பாடு ஊற்றுகளும் ஓட்டங்களும்” என்ற ஆய்வு நூலுக்கும், இரா.சடகோபன் எழுதிய “சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு” என்ற ஆய்வு நூலுக்கும் ராஜன் ஹூல் – ஆங்கிலத்தில் எழுதிய “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” ‘(மறைகரம் வெளிப்பட்டபோது)’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்த என்.எம். அமீனின் மொழிபெயர்ப்பு நூலுக்கும் துரைவி விருதுகள் வழங்கப்பட்டன.

பெண் ஊடகவியலாளர் நாகபூசணி கருப்பையாவுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான “ஜெயம் விருது” வழங்கப்பட்டது.

துரைவி 95 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரையை ”பாலின சமத்துவத்தை நசுக்கும் இரட்டைச் சுமை பெண்ணிய உரையாடல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் பிரமீளா பிரதீபன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் வழங்கினார்.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் பி. தேவராஜ் மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன் ஆகியோர் விருதுகளை வழங்கி வைத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0