உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அனைத்து மாணவர்களுக்கும் தொழில்நுட்ப வாய்ப்புகள் – பிரதமர் உறுதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய கல்வி முறைமையை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள புர்ஹானி செரண்டிப் சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற ‘உலக ரோபோ ஒலிம்பியாட்’ தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.


நாடு முழுவதிலுமிருந்து 66 அணிகள் பங்கேற்ற இப்போட்டி, கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. “ரோபோக்கள் கலாசாரத்தைச் சந்திக்கின்றன” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்களது புத்தாக்கங்களை காட்சிப்படுத்தினர்.


மேலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் கவனம் செலுத்துவதுதேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், இத்தகைய போட்டிகள் இளம் தலைமுறையின் தர்க்க சிந்தனை மற்றும் புத்தாக்க திறன்களை மேம்படுத்த உதவுகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.


2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ரோபோ ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை இரண்டு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0