தங்க விலை திடீர் உயர்வு – உள்ளூர் சந்தையிலும் அதிகரிப்பு.!
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,493.79 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி, இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 358,800 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 390,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் தங்க விலையின் மாற்றத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மாற்றங்களும் உள்ளூர் சந்தை விலைகளில் தாக்கம் செலுத்தி வருகின்றன.2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தங்க விலை பொதுவாக உயர்வை நோக்கிய போக்கில் இருந்ததுடன், சில காலங்களில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களும் பதிவாகியுள்ளன.
அண்மையில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த தங்க விலை, பின்னர் குறைந்து தற்போது மீண்டும் 4 இலட்ச ரூபாவை அண்மித்த நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.