உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிவனடி பாத மலை யாத்திரிகர்களுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விழிப்புணர்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் யாத்திரிகர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இன்று நோட்டன் தியகல பகுதியில் இடம்பெற்றது.


தேசிய நீர் வடிகால் திணைக்களம் அருகே “க்ளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாத்திரிகர்களுக்கு நோய் தொற்றுகளைத் தவிர்க்கும் வகையில் பானங்கள் வழங்கப்பட்டதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.


சிவனடி பாத மலை நோக்கிச் செல்லும் பிரதான சாலைகள் மற்றும் மலைப்பகுதிகளில் கழிவு பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பொலித்தீன் போன்றவற்றை வீசாமல் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.


கடந்த காலங்களில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட வனத் தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனுடன், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0