உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

நாட்டில் நிலவும் எரிபொருள் சிக்கல்களை கண்டறிந்து தீர்வு காணும் நோக்கில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடும் குழுக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் குழுக் கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றது.


ஒவ்வொரு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஏற்படும் எரிபொருள் சிக்கல்களை கண்டறிந்து, கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைந்து தீர்வுகளை வழங்குவது நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

கைத்தொழில், போக்குவரத்து, சுற்றுலா, உணவுப் பொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் எரிபொருள் ஒதுக்கீடு போதாமை குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்படின் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.


மேலும், எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மூலம் வலுசக்தி அமைச்சுக்கு சமர்ப்பித்து விரைவான தீர்வுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான எரிபொருள் வழங்கலில் கையெழுத்து கடித முறைமையை மாற்றி கியூஆர் குறியீட்டு முறையை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விலைகள்அதிகரிக்காதவாறு எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0