உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

லீசிங் விவகாரம்: பெண்ணை அச்சுறுத்தியதாக பொலிஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில், லீசிங் தொகை செலுத்தாததை முன்னிட்டு, லீசிங் நிறுவனம் மற்றும் மருதங்கேணி பொலிஸாருடன் சென்ற உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க தம்மை அச்சுறுத்தி அவமதித்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரைவலை மீன்பிடித் தொழிலுக்காக உழவியந்திரம் ஒன்றை லீசிங் அடிப்படையில் பெற்றிருந்த குடும்பஸ்தர், குறிப்பிட்ட காலத்தில் தொகையை செலுத்தாததாக கூறி, லீசிங் நிறுவனத்தினர் நேற்று (27) பொலிஸாருடன் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.


அப்போது, உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க, பெண் என்பதைப் பொருட்படுத்தாமல் தம்மிடம் கேவலமாக நடந்து கொண்டதாகவும், உழவியந்திரத்தை ஒப்படைக்காவிட்டால் தம்மையும் குடும்பத்தினரையும் போதைப்பொருள் குற்றச்சாட்டில்கைது செய்து சிறையில் அடைப்பதாக மிரட்டியதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.


மேலும், குளித்து உடை மாற்றிக்கொள்ளவும் நேரமளிக்காமல் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இவ்வாறான மிரட்டல்களால் தமது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவுவதாக தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0