உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன்தான்- முரளிதரன் குற்றச்சாட்டு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வடமராட்சி கிழக்கு பகுதியில் மக்களின் காணிகள் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அந்நேரத்தில் ஆதரவு அளித்ததே இன்றைய மக்களின் துன்பங்களுக்கு காரணம் என சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், கட்டைக்காடு, கேவில், சுண்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் காணிகளை வனஜீவராசி திணைக்களம் தேசிய பூங்கா என்ற பெயரில் கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும், இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், இந்தப் பகுதிகளை தேசிய பூங்காவாக நிலைநிறுத்தும் நோக்கில் யானைகளை கொண்டு வந்து மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்தேசிய பூங்காவுக்கு ஆதரவான நிலைப்பாடு முன்வைக்கப்பட்டதாகவும், அப்போது அதனை தாம் உள்ளிட்ட சிலர் எதிர்த்ததாகவும் முரளிதரன் குறிப்பிட்டார்.


தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டால் அந்தப் பகுதிகளில் மக்கள் குடியிருப்பது சாத்தியமில்லை என்பதையும் அப்போது எடுத்துக்கூறியிருந்ததாக அவர் தெரிவித்தார்.அத்துடன், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் பெரும்பான்மை உள்ள நிலையில், மக்களின் காணிகளை தேசிய பூங்காவாக அறிவித்த வர்த்தமானியை நீக்க முடியுமா என்பதையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0