உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தபால் திணைக்களத்தின் பெயரில் பாரிய பண மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கைத் தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்கள் ஏமாற்றப்படும் ஒரு பாரிய நிதி மோசடி குறித்து தபால் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

தபால் மூலம் வந்துள்ள ஒரு பொதியைப்பெற்றுக்கொள்வதற்கு சிறிய கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டும் எனக் கூறி, பொதுமக்களின் கைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. அந்தச் செய்தியில் உள்ள இணைப்பை கிளிக் செய்யும்போது, அது தபால் திணைக்களத்தின் இணையதளத்தைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலிப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு உங்களது வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு கோரப்படும். அவ்வாறு விபரங்களை வழங்கிய சில நிமிடங்களிலேயே, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவிலான பணம் திருடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இவ்வாறான முறைப்பாடுகள் தபால் திணைக்களத்திற்கு அதிகளவில் கிடைத்து வருகின்றன. இது தொடர்பில் தபால் திணைக்களம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து பொதுமக்கள் பின்வரும் விடயங்களில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

அந்நிய நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள். வங்கி அட்டை விபரங்கள் அல்லது கைபேசிக்கு வரும் OTP குறியீடுகளை எக்காரணம் கொண்டும் எவருக்கும் வழங்க வேண்டாம். தபால் திணைக்களம் ஒருபோதும் குறுஞ்செய்திகள் ஊடாக வங்கி விபரங்களைக் கோருவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். என அறிவுறுத்தப்படுகின்மையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

35 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0