உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தோட்டப் பகுதிகளில் இலவச மருத்துவத் திட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தூரப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, மஸ்கெலியா நகருக்கு வர முடியாத நிலையில் இருந்தாலும், அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று இலவச ஆயுர்வேத மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியை மஸ்கெலியா பிரதேச சபைத் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் முன்னெடுத்துள்ளார்.


இதன் ஒரு பகுதியாக, காட்மோர் தனியார் தோட்டத்தின் தம்பேத்தன பிரிவில் உள்ள மக்களுக்காக, நேற்று மொக்கா தமிழ் வித்தியாலயத்தில் விசேட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பிரதேச சபைத் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், வட்டார உறுப்பினர், ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் ஆகியோரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் காட்மோர் தோட்டத்தின் ஏழு பிரிவுகள், மொக்கா தோட்டத்தின் நான்கு பிரிவுகள் மற்றும் டீசைட் தோட்டத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.இவ்வாறான மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0