கால்வாயில் விழுந்து வயோதிபப் பெண் பலி!
மாத்தளை மாவட்டம், இரத்தோட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனது வீட்டுக்கு அருகிலிருந்த கால்வாயில் தவறி விழுந்து 74 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் இரத்தோட்டை, கைகாவல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவத்தையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக இரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.