உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வீடு புகுந்த வாள் வெட்டுத் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கொழும்பு, வெல்லம்பிட்டி – சாதம்வத்தை பகுதியில் நேற்று வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், சாதம்வத்தை – ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் குறித்த வீட்டின் உரிமையாளருடன் தற்காலிகமாகத் தங்கியிருந்தவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்தக் கொலையின் பின்னணியில் போதைப்பொருள் தொடர்பான காரணங்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவத்துக்குரிய வீட்டின் உரிமையாளர் தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனவே, போதைப்பொருள் குழுக்களுக்கிடையிலான பழிவாங்கல் காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள், அங்கிருந்தவரை வாளால் வெட்டித் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

37 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0