கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம்.!
சோதனை நடவடிக்கைகளுக்காகச் செல்வதாகப் பொலிஸ் புத்தகத்தில் பதிவு செய்து, பின்னர் விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த சார்ஜன்ட், நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. அனுரஜித்தின் உத்தரவின் பேரில் விசேட சோதனைக்குச் செல்வதாகக் கூறி கடமையிடத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ பதிவுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார்.
இருப்பினும், கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், அவர் மத்துகம – அகலவத்தை வீதியிலுள்ள விடுதி அறையில் பெண்ணொருவருடன் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடமைதவறியமை மற்றும் ஒழுக்க விதிகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரது பணி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.