உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கச்சதீவில் தமிழக வெற்றிக் கழகக் கொடியுடன் பயணித்த இலங்கை இளைஞர்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து சென்ற படகு ஒன்றில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது அங்கு கூடியிருந்த இந்திய யாத்திரிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.


ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இவ்வருட உற்சவத்தில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில், இலங்கையிலிருந்து சிறிய படகு ஒன்றில் பயணித்த சில இளைஞர்கள், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை ஏந்தியவாறு கச்சதீவுக்குச் சென்றனர்.


இலங்கைப் படகில் தமிழக அரசியல் கட்சியின் கொடி பறப்பதைக் கண்ட இந்திய யாத்திரிகர்களும்ஏனைய பக்தர்களும் அதனை வியப்புடனும் ஆர்வத்துடனும் கவனித்தனர்.இந்த சம்பவம் திருவிழா சூழலில் பேசுபொருளாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

38 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0