உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்: பெருந்திரள் பக்தர்கள் வருகையால் நெருக்கடி நிலை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.திருவிழா நேற்று மாலை ஆரம்பமாகி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் விரிவான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்களும், இலங்கையில் இருந்து 4,000 பக்தர்களும் என மொத்தம் 8,000 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், இந்தியாவில் இருந்து சுமார் 4,000 பேர் வருகை தந்ததுடன், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.இலங்கையில் இருந்து எதிர்பார்த்ததை விட இருமடங்கு அதிகமான பக்தர்கள் திரண்டதன் காரணமாக, தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளைப் பெறுவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.அதிகப்படியான பக்தர் திரளினால் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

37 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0