அம்பாறையில் திடீரென உருவான எரிபொருள் வரிசை.!
பாரசீக வளைகுடாவில் நிலவும் யுத்த சூழ்நிலையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் திடீரென பெருமளவில் திரண்டு வரிசையில் காத்திருக்கின்றனர்.
கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலை காணப்படுகிறது.
சில நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் எரிபொருள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், தற்போது நிரப்பு நிலையங்களின் முன்பாக இதுவரை இல்லாத அளவில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.கடந்த காலங்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தை விட, தற்போதைய வரிசைகள் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.