மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்.!
முன்னாள் அமைச்சர்கள் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான காணியை போலி உறுதிப்பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மேல் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகளுக்கு இன்று குற்றச்சாட்டுகள் வாசித்து அறிவிக்கப்பட்டன. முன்னாள் அமைச்சர்களுடன் சேர்ந்து சரத் எதிரிசிங்க, அஜித் மில்ரோய், ஜயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரகோன் ஆகியோரும் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்ட பிரதிவாதிகளாக உள்ளனர்.
இதனையடுத்து, அனைத்து பிரதிவாதிகளையும் பிணையில் விடுவித்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன, வழக்கை எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.