உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சுரேஷ் சலே கைது – அடுத்த இலக்கு கோட்டாவே ! விமல் பகிரங்க எச்சரிக்கை.

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான முன்னோடி நடவடிக்கை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கம் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த இலக்கு கோட்டாபய ராஜபக்ஷவே எனத் தமக்கு தெரிகிறது என்றும் அவர் கூறினார். ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கில் பயன்படுத்தி, சிலரை இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


புலனாய்வு அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்புக்காக சந்தேகநபர்களுடன் தொடர்பு வைத்திருப்பது இயல்பான நடைமுறையே எனவும், சஹ்ரான் ஹாஷிம் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடனே அவரை கண்காணித்தது புலனாய்வுப் பிரிவினரே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன எனக் கூறிய விமல் வீரவன்ச, இத்தகைய செயல்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0