உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மன்னார் மாவட்டச் செயலகத்தில் மீனவர் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

மன்னார் பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவச் சங்க பிரதிநிதிகள் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (27) மதியம் மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நிஜாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த கலந்துகொண்டார். அதேவேளை, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலைத் தொழில்மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வுகள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.


மன்னார் கடற்பகுதி ஏனைய பகுதிகளிலிருந்து மாறுபட்ட இயற்கை தன்மையைக் கொண்டதாக இருப்பதால், கடலடித் தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிலைத் தொடர அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், பட்டிவலை மற்றும் சுருக்குவலை தொடர்பான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.

தேசிய நீரியல் மற்றும் கடல் ஆய்வு நிறுவனம் (நாரா) மூலம் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் தகுந்த தீர்வு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.மீனவர்களுக்கான “பாடு” (மீன்பிடி எல்லை) நிர்ணயம் மற்றும்இலங்கை மீனவர்களுக்கிடையிலான நீண்டகால பிரச்சினை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பயன்படுத்தி, இராஜதந்திர ரீதியில் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஜனாதிபதி ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார். இந்திய மீனவர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில், இருநாட்டு மீனவர்களும் பாதிக்கப்படாத வகையில் சுமுகமான முடிவை எட்ட அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் மன்னார் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே கருத்து வெளியிட்டபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இக்கூட்டம் மீனவர்களின் கருத்துகளை கேட்டறியும் நோக்கத்திலேயே நடைபெற்றதாகக் கூறினார். எனினும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி தீர்வை வழங்கும் வகையில் உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0