யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான விசேட செயலமர்வு.!
யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையின் “ஒன்றிணைந்து கூட்டுறவு அபிவிருத்தி திட்டம்” எனும் திட்டத்தின் கீழ், பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்கள், அதேபோல் சமாசங்களின் பொது முகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கான மாவட்ட மட்ட விசேட செயலமர்வு நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட பனை மற்றும் தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கான செயலமர்வும் இடம்பெற்றது.
“மனப்பாங்கு மாற்றமும் ஆற்றல் விருத்தியும்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வுகளில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வியற் துறை விரிவுரையாளர் ரட்ணம் சர்வேஷ்வரா விரிவுரையாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு உரிய “ஐக்கிய தீபம்” பத்திரிகையும் இந்நிகழ்வின் போது வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.