குடவத்தை பகுதியில் பொலிஸார் மீது குற்றச்சாட்டு – மக்களுடன் சந்தித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில், பொதுமக்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், சில சந்தர்ப்பங்களில் பொலிஸார் மூர்க்கமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திர மூர்த்தியிடம் முறையிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் நேரடியாக குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.