பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில்.!
பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளராகக் கருதப்படும் ‘கமாண்டோ சலிந்த’ என அழைக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவராக ‘கமாண்டோ சலிந்த’ அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.