உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர் பொடி லஸ்ஸி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பாதாள உலகக் குழு உறுப்பினரும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லஸ்ஸி’ எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா, இன்று அதிகாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய இராஜதந்திர மட்டத்திலான பேச்சுகள் மற்றும் சர்வதேச பொலிஸாரின் (ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, இந்தியாவில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 05.55 மணியளவில் மும்பையிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL – 142 விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அங்கு விசேட பொலிஸ் குழுவினரால் பொறுப்பேற்கப்பட்ட அவர், பலத்த பாதுகாப்புடன் மேலதிக விசாரணைகளுக்காக எல்பிட்டிய பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் இலங்கையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொடி லஸ்ஸி, கடந்த 2024 டிசம்பர் 9 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து கடல் வழியாகச் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளியேற முயன்றபோது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் வைத்து இந்தியப் பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

25 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

46 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

69 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

53 0 0