அவசரநிலை உத்தரவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி.!
அவசரகால சட்ட விதிமுறைகளால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
டிட்வா புயலைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்த அவசரகால நிலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று (26) உயர் நீதிமன்றில் அழைக்கப்பட்டபோது, அவை தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.