இம்மாத ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!
பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவுகள் இன்று (26) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுகளுக்காக ரூபா 31 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இரண்டாம் கட்டத்தின் கீழ் ரூபா 3 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மொத்தமாக 8 இலட்சத்து 89 ஆயிரத்து 375 பயனாளிகளுக்கு நிதி வழங்கப்படவுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.