க. பொ. த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு .!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடையும் நிலையில், மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றைத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான பரீட்சை இன்று நிறைவடைகிறது.
கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை முடிந்த பின்னர் சில மாணவர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட நிலை காணப்பட்டதையடுத்து, இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பரீட்சை முடிவை முன்னிட்டு மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் நடத்தை குறித்து அவதானம் செலுத்தி, ஒழுங்கீன செயல்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.