உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

காணி முரண்பாடினால் நடந்த விபரீதம்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

எல்பிட்டிய, படுவன்ஹேன பொல்கஸ்வத்த பகுதியில் காணி முரண்பாட்டினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மூத்த சகோதரர் தனது இளைய சகோதரரை கறுவாப் பொல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (26) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு அருகிலேயே இருவரின் வீடுகளும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணியை அளவிடுவதற்காக நில அளவையாளர்கள் வந்து அளவீட்டுப் பணிகளை நிறைவு செய்து சென்றதன் பின்னர், காணி தொடர்பாக இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, உயிரிழந்த நபர் மீது கறுவாப் பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் தரையில் விழுந்துள்ளார்.


பின்னர் குடும்பத்தினர் அவரை உடனடியாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் 73 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைஎல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

47 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

57 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

72 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

57 0 0