கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி சென்ற பேருந்தில் போதைப்பொருள் கடத்தல் – ஒருவர் கைது.!
கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த பேருந்தொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைதாகியுள்ளார்.தனியார் பேருந்தொன்றில் போதைப்பொருளுடன் அம்பாறை பகுதிக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் அவர் பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான நபர் கொழும்பு பாலத்துறை பகுதியில் இருந்து குறித்த போதைப்பொருளை பெற்றிருந்ததுடன், நீண்டகாலமாக இவ்வகை கடத்தலில் ஈடுபட்டு வந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அவரிடமிருந்து 2,677 மில்லிகிராம் அளவிலான ஹெரோயின்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.