உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி சென்ற பேருந்தில் போதைப்பொருள் கடத்தல் – ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த பேருந்தொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைதாகியுள்ளார்.தனியார் பேருந்தொன்றில் போதைப்பொருளுடன் அம்பாறை பகுதிக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் அவர் பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான நபர் கொழும்பு பாலத்துறை பகுதியில் இருந்து குறித்த போதைப்பொருளை பெற்றிருந்ததுடன், நீண்டகாலமாக இவ்வகை கடத்தலில் ஈடுபட்டு வந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அவரிடமிருந்து 2,677 மில்லிகிராம் அளவிலான ஹெரோயின்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

47 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

57 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

72 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

57 0 0