உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் உலகுக்கு பாடம் எடுக்க முயற்சிப்பது வேடிக்கையானது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் இன்று உலக நாடுகளுக்குப் பாடம் எடுக்க முயற்சிப்பது வேடிக்கையானது என்று அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

லண்டனில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைகள் இரத்துச் செய்யப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
“சர்வதேச நாணய நிதியத்துடன் முறையாகப் பேச்சுகளை நடத்தி, நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும் அடித்தளத்தை நாம் இட்டுள்ளோம். ஆனால், அந்தப் பலன்களை அனுபவித்துக் கொண்டு ராஜபக்ஷ அணியினர் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு நாட்டுக்குக் களங்கத்தை ஏற்படுத்துவது முறையற்ற செயலாகும்.

ஒரு தலைவருக்குரிய உண்மையான தகுதி என்பது வெறும் மேடைகளில் உரையாற்றுவது மாத்திரமல்ல. மக்கள் மத்தியில் அவர் கொண்டுள்ள நன்மதிப்பும் கௌரவமுமே மிக முக்கியமானது. அந்தப் பல்கலைக்கழகங்கள் நாமல் ராஜபக்ஷவின் உரைகளை இரத்துச் செய்தமையானது, சர்வதேச ரீதியில் அவர்களுக்கு இருக்கும் மதிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

49 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0