உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் பிக்குகளை விமர்சிப்பதை பொதுபலசேனா அமைப்பு கண்டனம் .!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து முன்வைக்கப்படும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை பொதுபலசேனா அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.கொழும்பு இராஜகிரியவில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், பௌத்த பிக்குகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்காக முன்வருவது வரலாற்று ரீதியான கடமையாகும் என தெரிவித்தார்.

சோழர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற ஆக்கிரமிப்பாளர்களின் காலங்களிலும் சிங்கள பிக்குகளின் செல்வாக்கை சிதைக்க முடியவில்லை எனவும், நாட்டின் பாதுகாப்பும் பௌத்த மதமும் பிரிக்க முடியாத வகையில் தொடர்புடையவை எனவும் அவர் குறிப்பிட்டார்.தம்மை இனவாதிகள் என முத்திரை குத்தி நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுவதாகவும், தமக்கு எதிராக அரசியல் வழக்குகள் தொடரப்பட்டு வெளிநாட்டு பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உண்மைத் தகவல்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புகள் தடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், சட்டப் போராட்டங்களை முன்னெடுக்கவும், விகாரையைப் புனரமைக்கவும் நிதி தேவையுள்ளதாகவும், அதற்காக “ஜாதிக பின்கெட” என்ற பெயரில் புதிய வங்கி கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நீதிப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க விரும்புவோர்குறைந்தது 100 ரூபாவையேனும் அதில் வைப்புச் செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

49 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0