உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு: முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

2024ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ. ஜி. எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.


2024ஆம் ஆண்டு நடைபெற்ற பரீட்சையின் மூன்று வினாக்கள் கசிந்ததாகக் கூறி பெற்றோர்கள் குழுவொன்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 2024 டிசம்பர் 31ஆம் திகதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்காக பிரேமதிலக்க தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 3 மில்லியன் நட்டஈடாக அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் என்றும், அது நான்கு வாரங்களுக்குள் முழுமையாக செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.


எனினும், குறித்த நட்டஈட்டுத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அஞ்சன இரத்னசிறி இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இதனை ஆராய்ந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் குழாம், நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

48 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0