உரப்பையில் மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு.!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளானை பகுதியில் இன்று மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உரப்பையில் வைத்து, காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த குண்டு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரோ ஒருவர் தனது காணியை சுத்தம் செய்யும் போது அது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு இருந்து கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்னர், குறித்த குண்டை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.