உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
20 பார்வைகள்

ஆறு ஆண்டுகளாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான மற்றும் நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், விருப்பமின்றியும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்த கூட்டமைப்பு, கடந்த ஆறு ஆண்டுகளாக அநீதியான முறையில் மறுக்கப்பட்ட தமது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.


அதேவேளை, இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக தேசிய பொருளாதாரம், வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகளே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அறிக்கையில்வலியுறுத்தப்பட்டுள்ளது.உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

48 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0