உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புதிய அரசமைப்பை பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை ஆரம்பத்திலிருந்தோ அல்லது பூஜ்ஜியத்திலிருந்தோ தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட வரைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிகளைத் தொடர முடியும் என்றும் ஊடகங்களிடம் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக, புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்,
“புதிய அரசமைப்புக்காக நாம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பணிகளைத் தொடங்க வேண்டியதில்லை. கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் தயாரிக்கப்பட்ட பல வரைவுகள் மற்றும் ஆவணங்கள் ஏற்கனவே கைவசம் உள்ளன. அவற்றைப் பரிசீலித்து, சிறந்த அம்சங்களை உள்வாங்கி இந்தப் பணிகளைத் தொடர முடியும்.” – என்றார்.

அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவும் (பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்றவை) கூட முற்றிலும் புதிதாக உருவாக்கப்படாமல், முன்னைய வரைவுகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டது என்பதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

கடந்த கால வரைவுகளை அடிப்படையாகக் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்படும் என்று கூறிய போதிலும், அரசமைப்பு உருவாக்கப் பணிகளை நிறைவு செய்வதற்கான துல்லியமான காலவரையறை குறித்து இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

27 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0