உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
2 பார்வைகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா வடக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.02.2026 இன்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

அதற்கமைய குறித்த பாலம் தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் விளக்கங்கோரியிருந்தார்.

அந்தவகையில் 19 மீற்றர் நீளமான குறித்த குடமுருட்டிப் பாலத்தை அமைப்பதற்கு ஏறத்தாள 80 மில்லியன் ரூபா அளவில் நிதி தேவைப்படுமென வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன் பதில் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் மிகவும் பின்தங்கிய இடத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் சீரின்றிக் காணப்படுவதால் அந்தப் பகுதியிலுள்ள மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகவும், தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் குடமுருட்டி பாலத்தை அமைப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்படுகின்ற போதும் அந்தப்பாலத்தை அமைப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, குறித்த குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கோரிக்கை தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார்.

இதனையடுத்து வடமாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வாண்டிற்கான மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் குறித்த குடமுருட்டிப் பாலத்தினை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனத் தெரிவித்திருந்தார்.

குறித்த குடமுருட்டிப் பாலத்தினை அமைப்பதற்கு முன்வந்தமைக்காக வடமாகாண பிரதம செயலாளருக்கும், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த பாலத்தின் நிர்மாணம் தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளராலும் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிக்கையடி இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…

13 0 0
இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

18 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

26 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

19 0 0