யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!
திருகோணமலை – கந்தளாய், அக்போபுர பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அக்போபுர, யூனிட் 19 பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவர் ஆவார்.
நேற்று மாலை, சீனிபுர 15 ஆவது வலயத்தில் அமைந்துள்ள தனது நெல் வயலை, காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அவர் காவலுக்குச் சென்ற நிலையில் இரவு 9:10 மணியளவில் அங்கு வந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் கந்தளாய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.