உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை; 22 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கோரிய ஆக்ஸ்போர்டு பல்கலை!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
24 பார்வைகள்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் தொடர்பாக ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.

அமெரிக்க வரலாற்றாசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட “Shivaji: Hindu King in Islamic India” என்ற ஆங்கில மொழிப் புத்தகம், கடந்த 2003ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து ஆதாரமற்ற மற்றும் சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு தரப்புகளினாலும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.

\இந்த குற்றச்சாட்டுகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகமும் ஏற்றுக்கொண்ட நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு, சத்ரபதி சிவாஜி மகாராஜின் 13ஆம் தலைமுறை வாரிசும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான உதயன்ராஜே போஸ்லேவிடம், அந்த பதிப்பகம் உத்தியோகபூர்வ மன்னிப்புக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த மன்னிப்புக் கடிதத்தில், “புத்தகத்தின் 31, 33, 34 மற்றும் 93ஆம் பக்கங்களில் இடம்பெற்றுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் தொடர்பான சில தகவல்கள் ஆதாரமற்றவை என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.

இதற்காக எங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம். உதயன்ராஜே போஸ்லே அவர்களிடமும், பொதுமக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மன்னிப்பு அறிவிப்பு, மராத்திய மக்களிடையிலும், சிவாஜி மகாராஜ் ஆதரவாளர்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0