உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அவுஸ்திரேலிய- சிட்னி நகரம் அமைதி மற்றும் ஒற்றுமை என்ற செய்தியுடன் புத்தாண்டை வரவேற்றது.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம், சமீபத்தில் போண்டாய் கடற்கரையில் (Bondi Beach) நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சுவடுகள் மறையும் முன்பே, “அமைதி மற்றும் ஒற்றுமை” என்ற செய்தியுடன் புத்தாண்டு 2026-ஐ வரவேற்றது.

உலகப்புகழ் பெற்ற சிட்னி ஹார்பர் பாலம் (Sydney Harbour Bridge) முழுவதும் அமைதியை வலியுறுத்தும் வெண்மை நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.மேலும், தாக்குதலுக்குள்ளான யூத சமூகத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலத்தின் தூண்களில் யூத மதச் சின்னமான ‘மெனோரா’ (Menorah) ஒளிப்படம் திரையிடப்பட்டது.

கடந்த டிசம்பர் 14-ம் திகதி ஹனுக்கா பண்டிகையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டிருந்தன.சிட்னி நகர் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பொதுவாக அவுஸ்திரேலியாவில் அரிதாகக் காணப்படும் அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த துப்பாக்கிகளை ஏந்திய பொலிஸார், ஒப்பேரா ஹவுஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இரவு 11:00 மணியளவில் இசை மற்றும் பார்ட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, தாக்குதலில் பலியானவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் மொபைல் போன் விளக்குகளை ஒளிரச் செய்து அஞ்சலியில் பங்கேற்றனர்.

இத்தகைய அசாதாரண பாதுகாப்புச் சூழலை சிலர் சங்கடமாக உணரக்கூடும் என்றாலும், மக்களின் பாதுகாப்பிற்காக இதில் சமரசம் செய்ய முடியாது என்று நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார்.நள்ளிரவு பிறந்ததும், சிட்னியின் பாரம்பரியமான பிரம்மாண்ட வாணவேடிக்கைகள் வானைப் பிளந்தன.

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாமல் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து புத்தாண்டைக் கொண்டாடுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, லட்சக்கணக்கான மக்கள் ஹார்பர் பகுதியில் குவிந்தனர்.

சிட்னியில் தொடங்கிய இந்த புத்தாண்டு கொண்டாட்டத் தொடர், அடுத்தடுத்து துபாய், லண்டன் மற்றும் நியூயோர்க் என உலகெங்கும் தொடர்ந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0