உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா புத்தாண்டில் புதிய திட்டம்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் சீனாவில் கருத்தடை சாதனங்களுக்கு 13 சதவீத வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதே நேரத்தில் குழந்தை பராமரிப்பு சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் நாடு பிறப்பு விகிதங்களை அதிகரிக்க முயற்சிக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த வரி முறையின் மறுசீரமைப்பு, 1994 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பல விலக்குகளை நீக்குகிறது.முன்னதாக சீனா அதன் பல தசாப்தங்களாக ஒரு குழந்தை விதியை இன்னும் அமுல்படுத்தி வந்தது.

புதிய வரி மறுசீரமைப்பானது திருமணம் தொடர்பான சேவைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கான பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கிறது.

அத்துடன், பெற்றோர் விடுமுறையை நீட்டித்தல் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்குதல் உள்ளிட்டவையும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான சீன அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

சீனாவின் மக்கள் தொகை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாகக் குறைந்துவிட்டதாகவும், 2024 ஆம் ஆண்டில் வெறும் 9.54 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு, மக்கள் எத்தனை குழந்தைகளைப் பெறலாம் என்பது குறித்த விதிகளை சீனா தளர்த்தத் தொடங்கியபோது பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கையில் பாதி ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0