உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அவுஸ்திரேலியாவை பின்பற்றத் தயாராகும் பிரான்ஸ்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து 2026 ஆண்டு தொடக்கம் 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை தடை செய்ய பிரான்ஸ் அரசு, திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.இது விரைவில் சட்ட ரீதியான சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டு, புதிய ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய வாரங்களில் அவுஸ்திரேலியாவின் உலகிலேயே முதலாவது சமூக வலைதள தடையை (16 வயதுக்குக் கீழ்) விரைவாக பின்பற்ற வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவின் தடை டிசம்பர் மாதம் அமலுக்கு வந்தது. இதில் ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், டிக்டாக், யூடியூப் ஆகியவை அடங்கும்.

15 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளங்கள் முழு தடை. உயர்நிலைப் பள்ளிகளில் (15-18 வயது மாணவர்கள் பயிலும்) அலைபேசிகளுக்குத் தடை. (தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே இலைபேசி தடை உள்ளது).

இந்த வரைவு விரைவில் ஆய்வுக்கு அனுப்பப்படும். கல்வி தொழிற்சங்கங்களும் உயர்நிலைப் பள்ளி அலைபேசி தடை குறித்து ஆய்வு செய்யும். சமூக வலைதள தடை செப்டம்பர் 2026 முதல் அமலுக்கு வர வேண்டும் என அரசு விரும்புகிறது. சட்ட வரைவில், “பதின்வயதினரின் அதிகப்படியான திரை நேரத்தால் ஏற்படும் ஆபத்துகள்” குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில் தகாத உள்ளடக்கங்களுக்கு ஆளாகுதல், ஆன்லைன் இழிவுபடுத்தல், தூக்கக் கோளாறு ஆகியவை அடங்கும்.எதிர்கால தலைமுறையினரை இத்தகைய ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்ரோன் இம்மாதம் செயிண்ட் மாலோவில் நடந்த பொது விவாதத்தில், இளம் பதின்வயதினருக்கு சமூக வலைதள தடை வேண்டும் என்று உறுதிப்படுத்தினார். அதிக திரை நேரம் இருந்தால் பள்ளி சாதனைகள் குறையும்… மனநல பிரச்சினைகள் அதிகரிக்கும் என கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0