வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொ*லை.!
கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (14) திங்கட்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி பலத்த காயமடைந்த இளைஞன் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு முற்றியதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொட்டாஞ்சேனை பொலிஸார் அவர்களைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதேவேளை, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஆவார்.
முன்பகையினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விரு கொலைச் சம்பவங்கள் தொடர்பாகவும் கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஈடுபட்டு வருகின்றனர்.